என்னவளுக்கு ஒரு கவிதை

 

மேகங்களின் ஆன்மாக்கள்
பூமியில் திரியும்
மார்கழி மாதம்

ஊரே குளிரில்
உறைந்து கிடக்க,,,,

நான் மட்டும் உன்
இமைகளின் நிழளில்
குளிர் காய்ந்து கொண்டேன்

உன் குரல் நான்
கேட்டதில்லை

தெளிந்த தேன் துளி
கலந்த பூக்களாய்…
மெலிந்ததொரு மௌனம் அதில்
கலந்திருக்கக் கூடும்

உன் புன்னகை அதைப்
பார்த்ததில்லை

நீ சிரிக்கும் நேரங்களில்
வானில் புதிய நட்சத்திரங்கள்
உருவாகியிருக்கலாம்

உன் கையெழுத்து என்
கண்களுக்கு எட்டவில்லை.

நீ எழுதுவதால்
எழுத்துக்களுக்கு மத்தியில்
பொறாமை வளர்ந்திருக்கும்

உன் உறக்கம் நான்
கண்டதில்லை

உன் அருகில் இருக்கும்
காற்றின் துகள்கள்
சின்னச் சின்ன தேவதைகளாய்
உன்னை ரசித்து இருக்கலாம்

இப்பொழுதெல்லாம்
நான் நடக்கிறேன்

கண்ணாடியில்
முகம் பார்க்கையில்
எப்பொழுதும் நான்
ஒரே மாதிரியாக
இருப்பதாக நம்புகிறேன்

தனிமையில்
மௌனம் கொள்கிறேன்

யார் வந்தாலும்
பேசி விடுகிறேன்

இந்த மாற்றங்களை
ஏற்படுத்தியது

அன்று
நான் பார்த்துத்
தவித்த ஒப்பனையற்ற
உன் முகம்
                                                                    அருண்தேவன்...

பேணாவின் கிறுக்கல்கள்


ஏதோ எழுதுகிறது பேணா

யாருக்கும் தெரியாமல்

பார்த்தால் வெட்கபடுகிறது

மெல்லிய வலையொசை

என் செவியருகே வந்து

செல்கிறது யார் அது

என் அருகில் நீயா

கண்களை மறந்துவிட்டேன்

கனவு என்று தெரியாமல்…

அருண்தேவன்...

புன்னகை


என்னவளின் எழுத்துக்கள்

விழிகள் கோடி வேண்டுதடி உன் புன்னகை பார்க்க

என் விரல்கள் பத்தும் ஏங்குதடி உன் கை கோர்க்க

காற்றிலே மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர

                                                                                 அருண்தேவன்...

அழகு தமிழ்

 

நிலவே அழகு என்றிருந்தேன் என்னவளை காணும்வரை
மழலையின் மொழியே அழகு என்றிருந்தேன்
என்னவளின் மொழியை கேட்கும்வரை
ரோஜாவின் இதழே அழகு என்றிருந்தேன்
என்னவளின் இதழை காணும்வரை
மின்மினிப் பூச்சிகளே அழகு என்றிருந்தேன்
அவள் கண் சிமிட்டும் வரை
தமிழே உன்னைப்போல் என்னவளும் ஒப்பில்லா அழகுதான்.

அருண்தேவன்...

ஒரு வருட பயணம்

 

பனித்துளியென உன் முகம் சில நொடிகளில் மறைந்துவிடும் என் நினைவினில்
மலர்களுக்கும் தெரியும்
மலர்ந்தால் மரனிப்போம் என்று
என் மனதிற்கும் புரியும்
உன்னை நினைப்பது தவறு என்று
காலத்தின் சோதனை காதலில்
விழுந்து விட்டேன்
கடவுளின் சோதனை காதலை
இழந்து விட்டேன்
உன் விழிகளில் சில நொடிகள்
அந்த நொடிகளில் பல யுகங்கள்
வாழும் வரை வாழ்க்கை  துனையென நினைத்து
வழி தவறி சென்றது நினைவுகள்
சரியான பாதையை தேடியே காலம்                                                                        கடந்தது என்னை தொலைத்து விடாதே                                                    மீண்டு வர நான் விதை அல்ல
உதிர்ந்து விழும் இலை

அருண்தேவன்...

உனக்கும் எனக்கும்

 

ஒரு நாள் ஒரு நிமிடம்
கண் எதிரே
என் காதல் தேவதை
இமைக்காமல் ரசிக்கிறது கண்கள்
எதையோ எதிர்பார்த்து
துடிக்கிறது இதயம்.

உன் இதழ் அசைவில்
இழந்து விட்டேன் என்னை

கவலைகளை எல்லாம் மறந்தேன்
உன்னுடன் இருந்த நொடிகளில்
காலமெல்லாம் எப்படி இருப்பேன்
உன் விழிகளை மறந்து

அதிகமாய் உன்னை பிடிக்கும்
என்பதை விட வேறு என்ன
காரணம் உன்னை நேசிக்க.

நீ என்னுடன் இருந்த
நொடிகளே என் வாழ்வின்
சிறந்த தருணங்கள் அழியாது
மன்னில் புதையும் வரை.

இந்த உலகில் விலைமதிப்பற்ற
பொக்கிஷம் உன் புன்னகையே
நீ பேசும் வார்த்தைகளையே
பேசி பார்க்கிறேன் மனசுக்குள்.

என் மனதின் ஆசைகளை சொல்ல
இந்த கவிதைக்கு மட்டுமே தெரியும்.


அருண்தேவன்...

கனவுலகில் நான்

 

அழகுக்கு அழகு சேர்க்கும்
புன்னகையில் சிறு வெட்கம்
யாரும் பார்த்திராத நேரம்
கனவுலகில் நான்.

ரோஜா என்று நினைத்தேன்
நிலவாக மாறுகிறாய்
ரோஜாவை எட்டி பறித்து விடுவேன்
நிலவை பார்க்க மட்டுமே முடியும்.

காலம் நிலவிடம் அழைத்து
செல்லுமா மன்னில் புதைக்குமா
என் காதலை

என் கண்களும் மயங்கியது
உன் வெட்கத்தில் என்
இதயம் பறந்தது வானத்தில்

நானல்லவா போட்டிருக்க வேண்டும்
மாறுதலுக்கு நீ போட்டு விட்டாயோ
மூன்று முடிச்சு என் கைகளில்.

                அருண்தேவன்...

நிழல்

 

என் மனதின் ரகசியத்தை 
அறிந்த மான் விழிப்பெண்ணே
என்னை ஒளியென நினைத்து 
வெறுத்து விட்டாயோ
அது உன் நிழலென 
அறியாமல் விலகி விட்டாயே
தள்ளி இருந்தால் மறைந்து
தான் போகும் பிரிந்து போகாது
நான் உன் நிழலைப்போன்றவன்
மறைந்து போனாலும்
பிரிந்து போக மாட்டேன்
அருண்தேவன்...

என் வாழ்வில் ஒரு நாள்

 

மழைச்சாரலில் மலை உச்சியில்
ஏற்றிய தீப திரு ஒளியின்
வெளிச்சத்தில் என் விரல்களை
பற்றிக் கொண்ட என் காதல்
என்றும் இப்படியே நீடிக்க
தீப திரு ஒளியின் முன்
மேகங்கள் ஒன்றோடு ஒன்று
உரசி சப்த ஸ்வரங்களை இசைக்க
அனைத்து செடி கொடிகளும் இசைந்து
மரங்களின் நடன மேடையில்
நீ என் கைகளை பிடித்து என்னுடன்
மலைப்பாதையில் இனைந்து வருகையில்
நடைபாதையும் நகர்ந்தது
 நட்சத்திரங்களும் மறைந்தது
உன் வெட்கத்தைப் பார்த்து
ஒரு நொடி என்னை விட்டு
பிரிந்தாய் உன் விரல்களை
விட்டு செல்லவில்லை என்று
என்னும் முன் தடம் மாறி
தவறி விழுந்தாய் நீ
மறுநொடி உன் விரல்களை
பிடிக்க காலம் என்னை
சிறைபிடித்தது தனிமை
என்னும் சிறையில்
தனிமனிதனாக வாழ
கற்றுக்கொள்கிறேன் நீ இல்லா
நொடிகளை உன் நினைவுகளுடன்
                    அருண்தேவன்...

வண்ணத்துபூச்சி

 

அதோ அந்த ஆற்றங்கறையில்
ஒடையின் இடுக்கில் வளர்ந்த
அந்த செடியின் அழகிய வண்ண
மலர்களின் இதழில் இருக்கும்
பனித்துளிகளின் மேனியில்
ஒளிந்து இருக்கும் ஆகாய
சூரியன் வெளியே வர
துடிக்கும் அந்த வேலையில்
உடல் முழுவதும் வண்ணங்களை
பூசி இலைப்பார இடம் தேடி
வந்த வண்ணத்துப் பூச்சியும்
வண்ண மலர்களின் இதழ்களில்
இடம் பிடிக்க அழகான காட்சிகளை
நிழல் படம் எடுத்த பனித்துளியை
சிதறடித்து சிறு துளிகள்
பல துளியாக படர்ந்து அழகு
மிகு ஆதவனை வரவேற்றது.
ஆதவனின் ஆனந்தத்தை
கண்ட வண்ன மலர்களும்
இதழ் விரித்து அவளது
கூந்தலில் அடைக்கலம் ஆனது.
                                                                    அருண்தேவன்...

என் வாழ்வில் ஒரு நாள்


அலைபேசியில் அழைப்பு ஒலி
யாரென்று எடுத்தால் அழைப்பது
ஒரு மான் விழி தொலைவில்
இருந்தாலும் உன் குரலை கேட்கவே
அலைபேசியை அனுப்பிவைத்தானோ
நேரில் பார்க்கலாமா என்றது
என் தேவதையின் குரல்
பயணம் தொடங்கியது அந்த 
நொடி உன்னை கான மைல்கள்
மனித்தூளிகளாய் கடந்தது
ஒவ்வொரு மனித்துளிகளும்
ஒரு யுகமானது எப்படியோ
வந்து விட்டேன் உன் இல்லம் தேடி
அழகு புன்னகையில் சிவந்த என்
தேவதையின் முகத்தை கண்டுவிட்டேன்
நான் பார்க்க அலங்காரம் செய்கிறயோ
மை விழிக்கு மை இட்டு என்னை
வீழ்த்த என் விழியை தேடுகிறயோ
இதழ்களுக்கு வர்ணம் அடிக்கிறாயோ
ரோஜா இதழ்களுக்கு வர்ணம் எதற்கு
அழகுக்கு மேலும் அழகு செர்த்து
என் கண்களை இமைக்காமல்
ரசிக்க வைக்கிறாய்
                    அருண்தேவன்...

கனவுலகில் நான்

காலை தூக்கம் கண்களை இமைக்க
அவசரமாக புறப்படு என்ற அம்மாவின்
குரலை கேட்டு விழித்தது கண்கள்
புத்தாடைகளெல்லாம் உடுத்தி
உறவினர்களின் படை சூழ
சிறு புன்னகையுடன் வாகனத்தில்
அமர்ந்து உன்னை பற்றிய
நினைவுடன் மனதில் ஆயிரம்
காதல் கவிதைகள் உதிக்க
அனைத்தையும் உனக்காக
பொக்கிஷமாய் என் இதய
ஓலைச்சுவடிகளில் பதித்து விட
திரும்பும் திசையெல்லாம் உன்னை
பற்றிய கற்பணையில் கவிதைகள் மலர
நான் நினைவிலே மிதக்க வாகனம்
வந்தடைந்தது உந்தன் அரண்மனைக்கு
என் கனவு கன்னி நீ தான் என
நினைத்து கற்பனையில் உன்னை
சிலை வடித்து என் இதய
கோவிலில் நிறுத்தும் வேலையில்
யாரோ என்னை அழைக்கிறார்கள்
எழுந்திரிடா நேரம் ஆச்சி போகனும்
என்று சொன்னது கண்கள்
விழிக்க இது கனவென்று
தெரியாமல் அனைத்தையும் நான்
ரசித்துக் கொண்டு இருந்தேன்...
                         அருண்தேவன்...

 Shadow Beauty Salon Propritor -  ARUN.K Contact - Mr.arundevan@gmail.com  A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...